states

img

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்து வச் சேர்க்கையில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் (Non-Resident Indian - வெளிநாடு வாழ் இந்தியர்) முறைகேடு நடந்த தாகக் கூறி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக் கத்துறை சோதனை நடத்தியுள்ளது. செவ் வாய்க்கிழமை காலை முதல் கொல்கத்தாவின் சால்ட் லேக் மற்றும் பிர்பூம், துர்காபூர், ஜார்கி ராம் மற்றும் பர்த்வான் ஆகிய இடங்க ளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை யின் போது மருத்துவக்கல்லூரி அலுவல கங்கள் மற்றும் வீடுகளில் இருந்து  வங்கி தொடர்பான பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப் பற்றியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இன்னும் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.